அர்ஜுனன் சிவ பெருமான் பாசுபதம்


வைகாசி விசாகத்தில் அஸ்திரம் பெற்ற அர்ஜுனன்
அர்ஜுனன் தவம் இறைவர் திருப்பெயர் : பாசுபதேஸ்வரரர், பாசுபதநாதர்
இறைவியார் திருப்பெயர் : சற்குணாம்பாள், நல்லநாயகிதல மரம் : மூங்கில்
தீர்த்தம் : கிருபா தீர்த்தம், தீர்த்தக் குளம். (ஆலயத்தின் எதிரில் உள்ளது.)
வழிபட்டோர் : நாரதர், அர்ச்சுனன் முதலியோர்
புராணப் பெயர் : திருவேட்களம்
பாடியவர்கள் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்
#பாசுபதம்_வாங்கியது_ஏன்??...பாசுபதத்தை ஏவினால் அர்ஜூனனுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் தான் அதனை அவர் உபயோகிக்கவில்லை என்ற சில மூடர்கள் உளறி வருகின்றனர்.
அது முற்றிலும் தவறு! !!!முதலில் அர்ஜுனன் போரில் வெற்றி பெற தேவையான அனைத்து அஸ்திரங்களையும் குரு துரோணர் மூலம் கற்று வெற்றியையும் அடைந்துள்ளார்.
அவர் தெய்வீக அஸ்திரம் வேண்டியது அசுரர்களையும் வரம் பெற்று அதர்மம் புரியும் அதர்மிகளையும் அழிப்பதற்காகவே! !!
சாதரண வில்லினால் பல வெற்றிகளையும் அடைந்தவர் அர்ஜுனன்.
இவரது வெற்றிகளை தொடர்ந்து இந்த பக்கத்தில் காணலாம்! !
சரி விஷயத்திற்கு வருவோம்!!
#அர்ஜுனன்_தவம்...வியாசரின் அறிவுரைப்படி யுதிஷ்டிரர் கட்டளைகிணங்க அர்ஜுனன் தவம் செல்ல இவையே காரணம்
(வியாசர் உரைத்தது)....
தவத்தின் காரணமாகவும் வீரத்தின் காரணமாகவும் தேவர்களைக் காணும் #தகுதியைப் பெற்றவனாவான்.
அர்ஜுனன், அழிவறியாத, எப்போதும் வெற்றிபெறும், ஒப்பற்ற, நித்திய தெய்வமான பழங்காலத்து #நாராயணனுக்கு_நண்பனும்,
பெரும் சக்தி படைத்த #முனிவனுமாவான்.
பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட அர்ஜுனன், இந்திரனிடமும், #ருத்திரனிடமும், லோகபாலர்களிடமும் இருந்து ஆயுதங்களைப் பெற்ற பிறகு பெரும் சாதனைகளைச் சாதிப்பான்!!
#அர்ஜுனன்_வேண்டுவது...அர்ஜுனன் முக்கண்ணன் சிவபெருமானிடம் #பிரம்மசிரத்தையே வேண்டினார்.பாசுபதம் அல்ல.
"ஓ காளையைக் குறியீடாகக் கொண்டிருக்கும் சிறப்புமிக்க தெய்வமே, நீ நான் விரும்புவதை அருள்வதாக இருந்தால், ஓ தலைவா, உன்னால் தாங்கப்படும் தெய்வீகமான ஆயுதமான பிரம்மசிர ஆயுதத்தைப் பெற விரும்புகிறேன்.
#யாருக்காக_இந்த_ஆயுதம்....அர்ஜுனன் பிரம்மசிர அஸ்திரத்தை வேண்டுவது யாரை அழிப்பதற்காக என்பதை,
யுக முடிவில் மொத்த #அண்டத்தையே அழிக்கும் சக்தி கொண்ட அந்த ஆயுதத்தின் துணை கொண்டு,
ஓ தேவர்களுக்குத் தேவா {சிவனே}, நான் ஒரு புறமும், #கர்ணன், #பீஷ்மர், கிருபர் மற்றும் துரோணர் ஆகியோர் மறு புறமும் நின்று கடும்போரிடும்போது உமது கருணையால் நான் வெற்றியை அடைவேன்.
#தானவர்களையும்_அழிக்கவும்_மேலும்தானவர்கள், ராட்சசர்கள், தீய ஆவிகள், பிசாசுகள், கந்தர்வர்கள், நாகர்கள் என அனைவரையும் உட்கொள்ளும் அந்த ஆயுதத்தை ஏவும் போது ,
அதில் இருந்து ஆயிரக்கணக்கான கடும் கதாயுதங்களும், கடும் விஷம் கொண்ட பாம்புகள் போன்ற கணைகளையும் உற்பத்தி செய்யும்.
மேலும் அதன் தாக்கம் அறிய...
https://m.facebook.com/story.php?story_fbid=1065097170570268&id=341734346239891அந்த ஆயுதத்தைக் கொண்டு நான் பீஷ்மர், துரோணர், கிருபர், எப்போதும் #இழிவாகவே_பேசும்_கர்ணன் ஆகியோருடன் நான் போரிடுவேன்.
ஓ பகனின் கண்களை அழித்த சிறப்புமிக்கவனே, அவர்களுடன் சண்டையிட்டு #வெற்றி பெறுவதே எனது முதன்மையான விருப்பமாகும்" என்கிறார் அர்ஜுனன்...
#ஆனால்_சிவன்_கொடுத்தது....பிரம்மசிரஸ் வேண்டிய பார்த்தனுக்கு சிவ பெருமான் தாமாகவே விரும்பி வழங்கியது #பாசுபதம்...
ஓ அர்ஜுனனே, எனக்குப் #பிடித்த எனது ஆயுதமான பாசுபதத்தை {பாசுபதாயுதத்தை} நான் உனக்குத் தருகிறேன்.
நீ அதைத் #தாங்கவும்_விடுக்கவும்_திரும்பப்பெறவும் தகுதி வாய்ந்தவன்.
இந்திரனோ, யமனோ, யக்ஷர்களின் மன்னனோ, வருணனோ அல்லது வாயுவோ இந்த ஆயுதம் குறித்து #அறியமாட்டார்கள். அப்படி இருக்கும்போது #மனிதர்கள் இது குறித்து எவ்வாறு அறிவார்கள்?
#சிவபெருமான்_Condition: #பலம் குறைந்த எதிரியின் மேல் இதை விடுத்தால் இந்த முழு அண்டமும் அழிந்துவிடும்.
ஆகையால், சரியான #காரணம் இல்லாமல் இந்த ஆயுதத்தை விடுக்கக்கூடாது.
இந்த மூன்று உலகிலும் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றில், இந்த ஆயுதத்தால் #அழிக்க முடியாதவர் யாரும் இல்லை.
இந்த ஆயுதத்தை மனதாலும், கண்ணாலும், வார்த்தைகளாலும், வில்லாலும் தொடுக்கலாம்..
#அர்ஜுனன்_கனவில்_பாசுபதம்...அர்ஜுனன் ஜெயத்ரதனை வதைப்பதை பற்றி சிந்தித்து கொண்டிருக்கும் போது பகவான் கிருஷ்ணர் பாசுபதம் பெற வழி கூறினார்...
“ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பாசுபதம் என்ற பெயரில் அழிக்கப்பட முடியாத ஓர் உயர்ந்த ஆயுதம் இருக்கிறது.
அதைக் கொண்டு தேவன் மகேஸ்வரன் {சிவன்}, தைத்தியர்கள் அனைவரையும் போரில் கொன்றான்.
அதை இப்போது நீ நினைவு கூர்ந்தால், நாளை #ஜெயத்ரதனை உன்னால் கொல்ல முடியும்.
அதை நீ (இப்போது) அறியவில்லையெனில், உன் இதயத்திற்குள், காளையைத் தன் அடையாளமாகக் {காளைக் கொடி} கொண்ட தேவனை {சிவனைத்} துதிப்பாயாக.
#Finally ....
1.அர்ஜுனன் தவம் இருந்ததே கௌரவ சேனையில் உள்ள பலம் மிக்க வீரர்களை அழிப்பதற்கே!!
2.கேட்டது பிரம்மசிரம் கிடைத்தது!! பாசுபதம்(தகுதியால்)
3.ஆயுதம் கேட்டது பீஷ்மர்,துரோணர்,கிருபர்,கர்ணனை அழிப்பதற்கே!!
4.Condition பலம் குன்றியவர்கள் மேல் ஏவ கூடாது!!
5.பாசுபதம் பயன்படுத்திய ஒரே இடம் ஹிரண்யபுர யுத்தம் .அதில் கூட அர்ஜுனனுக்கு ஆபத்து இல்லை!! (சரியான காரணத்திற்காக பயன்படுத்தியுள்ளார்)
ஹிரண்யபுரம் யுத்தம் காண
https://m.facebook.com/story.php?story_fbid=1052779865135332&id=341734346239891
7.ஜெயத்ரதன் மீது பாசுபதம் ஏவினால் கூட அர்ஜுனனுக்கு வெற்றி தான்! !!
Main points...
8.பலம் குன்றியவர்கள் என்றால் யார் பீஷ்மரா? துரோணரா? கிருபரா? இல்லை கர்ணனா??இவர்கள் மீது ஏவினால் அது அர்ஜுனனுக்கு ஆபத்தா என்ன??
அப்போது கர்ணன் போன்ற இவர்கள் வீரமற்றவர்களா??
ஆயுதம் கேட்டதே இவர்களுக்கு இதில் இவர்கள் மீது ஏவினால் அர்ஜுனனுக்கு எப்படிங்கடா ஆபத்து வரும் மூடர்களே!!!!
அர்ஜுனன் அவரே அவர் உயிரை எடுக்க ஆயுதம் வாங்கிட்டு வந்த மாதிரி பேசுதுங்க
தெய்வீக ஆயுதத்தை பயன்படுத்தாமல் இருப்பது அர்ஜுனன் கொள்கை அதை தவறாக சித்தரிப்பதே எதிரிகள் கொள்கை
Comments
Post a Comment